Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வானுலாப் போகும் வெண்ணிலா

Copied!
Kavignar Vijayanethran

வானுலாப் போகும் வெண்ணிலா 

திங்களுக்கு அதிபதி சோமனாய் 
திருவமுது ஊட்டும் அம்புலியாய்
தண்மை அளிக்கும் தண்ணவனாய்
தேவரின் பெயரில் தானவனாய் 

இரவிற்கு ஒளிதரும் சுகுபராக
இளம்மாதவள் அழகு நிலவாய்
வடிவத்தில் தேய்ந்து பிறையாய் 
வடுதனைச் சுமந்து களங்கனாய் 

ஆலோன் அலவன் நிசாகரனாய்
ஆணாய்ப் பெண்ணாய் அஃதாய் 
அத்துனைப் பெயரினை ஏற்றாய் 
அதற்கொரு வடிவமும் பெற்றாய் 

காரிருளுக்குக் காவல் நின்றாய்
காதலுக்குத் தூது சென்றாய்  - முக் 
கண்ணன் சிகையில் ஒளிர்ந்தாய் 
முழுமதியாய் வானில் மிதந்தாய்!!!

கலைஞனுக்குக் காதலியானாய் 
உழவனுக்கு உறுதுணையானாய் 
பகலவன் ஒளியதைப் பெற்று
பாரிதற்கு வெளிச்சம் தந்தாய்!!! 

காதல் வானில் வீதி உலா
காலமெல்லாம் போகின்றாய்..
கருப்பு வெள்ளை ஆடைமாற்றி
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்...

ஊரையெல்லாம் உறங்க வைத்து 
யாரையிங்கு தேடுகின்றாய்...
ஊமைபோலத்  தினம் மிதந்து 
மௌனராகம் பாடுகின்றாய்...

மோகங்கொண்டு வானதனில் 
மேகப்போர்வைப் போர்த்துகிறாய்..
தாகம் தீர்ந்து முடிந்த பின்னே
சோகம் கொண்டேன் தேய்கின்றாய்..

வானில் உலா போன உன்னை 
வயல்கிணற்றில் மறைத்து வைத்து 
நான் மகிழ்ந்த காலம் உண்டு 
நாணி முகிலில் ஒளியும் போது.

தேய்ந்து நீயும் போகையிலே
தேமி நானும்  அழுததுண்டு
வளர்ந்து வரும் வேளையிலே
வாஞ்சையோடு சிரித்ததுண்டு

வாழ்வும் தாழ்வும் வாழ்வில்
வந்து போகுமென உணர்ந்தேன் 
வளர்பிறைத் தேய்பிறையாய் 
வளர்ந்து  நீயும் தேயும் போது..

நிலாச்சோறு கிடப்பில் போய்
நிலாவில் சோறு நடப்பில் வந்தும் 
உலா போகும் உன் அழகில் 
விழாதவர் மண்ணில் உண்டோ???

✍️ கவிஞர் விஜயநேத்ரன் 

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வீரத்தாலாட்டு : போரில் வீர சொர்க்கம் எய்திய தன்மகனுக்காகத் தாய் பாடும் பாட்டு

புரியாத புதிர் : மரணமென்னும் முற்றுப்புள்ளி

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

அன்பென்னும் ஆலமரம்

கவிஞர் விஜயநேத்ரன்

இதயம் : வெற்றுச் சதையா?? பற்றின் விதையா??

கவிஞர் விஜயநேத்ரன்

மகளென்னும் தேவதைகள் : தந்தைக்குத் தாயாகும் மகள்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

காற்றின் திசையில் கரையும் கால்முளைத்த நினைவுகள்

கவிஞர் விஜயநேத்ரன்

புரியாத புதிர் : மரணமென்னும் முற்றுப்புள்ளி